WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


 on 12/04/2013

health-நிந்தவூர் உமர் அலி-
நடுத்தர வருமானம் கொண்ட நம் நாட்டில் அதிகரித்து வரும் சனத்தொகைப் பெருக்கமும், நகரமயமாக்கம், கைத்தொழில் மயமாக்கம் என்பவற்றினூடாக அதிவேகமாக  மாறுபடத் தொடங்கிய இலங்கையர்களின் வாழ்க்கை முறையினால்   அவர்களின் தேகாரோக்கியத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமலுள்ளது.

அரசு சுகாதார துறைக்கு   ஒதுக்குகின்ற நிதியில் பெருமளவிலான நிதி தொற்றா நோய்களிற்காகவே செலவிடப்படுகின்றது. அதிகமானவர்கள் நோய் தாக்கத்திற்குட்படும் போது அவர்கள் தொழில் புரியும் நாட்களின் அளவு குறைகின்றது, அதே நேரம் நோய்க்கான  மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன. இந்த நிலை  நாட்டின் தேசிய உற்பத்தியில்    கணிசமான அளவு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
நோய்கள்  இருவகைப்படுகின்றன அவையாவன
1) கிருமிகளினால் ஏற்படுத்தப்படுவன –  இவை தோற்றும் நோய்கள்  Communicable  Diseases
2) தொற்றா  நோய்கள் - வேறு காரணிகளால் ஏற்படக்கூடியான  Non  Communicable Diseases
மாறுபட்ட வாழ்க்கை முறையினால்  முன்னொருபோதிலும் இல்லாதளவு  தொடரா நோய்களின் தாக்கம்  அதிகரித்துக் காணப்படுகின்றது. அப்படிக் காணப்படும்  நோய்களில்;
  • சர்க்கரை வியாதி -Diabetic
  • புற்றுநோய் -cancer ,
  • முடியுறு நாடியில் ஏற்படும் நோய்கள் -Coronary  Artery  diseases.
  • அதிகரித்த கொழுப்பு / கொலேச்டேரோல் – Hyper lipideamia
  • அதிகரித்த குருதியமுக்கம் /மூளைக்கான குருதிக்குளாய்களின் நோய்கள் -Hypertension  and Cerebro  Vascular  Diseases
  •  நாட்பட்ட சிறுநீரக நோய்கள்-Chronic Kidney Diseases ,
  • நாட்பட்ட சுவாசத்தொகுதி நோய்கள்/ Chronic  Lung  Diseases 
ஏனைய  உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தெற்காசிய நாடுகளில்  உள்ளவர்கள்  6 வருடங்கள்  முன்னராகவே மாரடைப்பு நோய்  ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகம்  காணப்படுகின்றது,  அந்தவகையில் இலங்கையும்  அதிலடங்குகின்றது.
2012ம் வருடத்தின் August  மாதம் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களது கருத்துப்படி, இலங்கையில் நிகழும் 65% ஆன மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே நடைபெறுகின்றன.
வாழ்க்கை   முறையினை  பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும்  மாற்றும்பொழுது  இதய நோய்கள் (PRE MATURE HEART DISEASES), சர்க்கரைவியாதி (DIABETES), உயர்குருதி அமுக்கம் (HYPERTENSION), அதனைத்தொடர்ந்து வருகின்ற பக்கவாதம் (STROKE), புற்றுநோய்கள் (CANCERS), நாட்பட்ட சிறுநீரக நோய்கள்  போன்றவற்றினை  குறைக்க முடியும்.
21 மில்லியன் சனத்தொகையுடைய நம் நாட்டில் ஏற்படும்  மரணங்களை ஆய்வு செய்தபோது  39.2% ஆன மரணங்கள்  உயர்குருதியமுக்கம் சார்ந்தததாகவும், போதிய உடற்பயிற்சியும், அப்பியாசமும் இன்மை 26%மான மரணங்களிற்கு காரணமாகவும் உள்ளது.
அடுத்ததாக  அதிகரித்த உடல் பருமன் (OBESITY) இனால் 21% மானவர்கள் அதன் சார்பான நோய் நிலைகள் மூலம் மரணமடைகின்றனர். 8% மானவர்கள் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதாலும் அது சார்பான பிரச்சினைகளினாலும்  மரணமடைகின்றனர். அதேவேளை புகையிலை  பாவனையினால் 10.6% மானவர்கள் மரணமடைவதாகவும் தரவுகள்  சான்று பகர்கின்றன.
தொடரா நோய்களுக்கான  பிரதான காரணங்களாக
  1. பாதுகாப்பற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்.
  2. மதுபாவனை.
  3. புகைபிடித்தல்.
  4. அப்பியாசம்/உடல்பயிற்சியின்மை.
போன்றன அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு  அடையாளம் காணப்பட்டதில் உணவுப் பழக்கத்தினைப்பற்றி  நோக்குவோம்
ஒரு மனிதனது அடிப்படை தேவையான உணவானது உடல்வளர்ச்சி, சக்திவளங்குதல், ஆரோக்கியம் பேணல் போன்ற இன்றியமையாத  செயல்பாடுகளில்  பங்கேற்கின்றது.
உணவுப்பொருட்களில் மாப்பொருள்,புரதம்,கொழுப்பு,விட்டமின்கள்  மற்றும் கனியுப்பு என்பன அடங்கியுள்ளது நாமறிந்தவிடயம். மேற்குறித்த செயல்பாடுகள் ஒவ்வொன்றும் குறித்த உணவின் கூறுகளினாலேயே நடைபெறுகின்றன.
அந்த உணவுகளின்   பிரதான தொழில்களாக;
  • மாப்பொருள் – சக்தியையும், நார்ப்பொருட்களை  வளங்கலும்.
  • புரதம் – உடல் வளர்ச்சி, பாதுகாப்பு, சிறிதளவு சக்தி வழங்கல்
  • கொழுப்பு – சக்தி சேமிப்பும், வழங்கலும்  
இம் மூன்று கூறுகளும் மனித உடலியல் தேவைகளை நிறைவுசெய்வதில் பின்னிப்பிணைந்ததது  போல விட்டமின்களும் கனியுப்புக்களும்  இன்றியமையாததாக உள்ளன.
இன்று நாம் உண்ணும் ஒரு வேளை   உணவு அளவிற்கதிகமான மாப்போருளையும், கொழுப்பையும் கொண்டிருப்பதாக இலங்கையின் சுகாதார திணைக்கள அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் ஒவ்வொரு இலங்கையரும் உள்ளெடுக்கும் உப்பின் அளவும் அதிகரித்துள்ளதாக அது கூறுகின்றது.
இதற்கமைய  தொற்றா நோய்கள்  அனைத்திற்கும் பிராதான நுழைவாயிலாகவும், ஒத்தாசை புரிவதுமாக உள்ளது  நம்மிடத்தில் காணப்படும் உணவுப் பழக்க வழக்கமே என்று கூறமுடியும்.
நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவுகளையும்  அவர்கள் செய்த வேலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்குத் தெளிவாகவே புரியும் நாம் எதை உண்ணுகின்றோம் என்ன செய்கின்றோம் என்று.
health2முன்னரிருந்தவர்கள் போன்று  இப்பொழுதெல்லாம் மீன்களையோ, பழங்களையோ,மரக்கறிகளையோ,கீரை வகைகளையோ அதிகம் உண்பதற்கு பதிலாக நாம்  அதிக மிருக கொழுப்பு, அதிகம் பொரித்த, அதிகம் உப்பும், வேறு இரசாயன சுவை, நிரமூட்டிகளைக்கொண்ட உணவுகளையே  கூடுதலாக உண்கின்றோம்.
இவை  சுகாதாரத்திற்கு  அதிக கேடை  விளைவிக்கக்கூடிய உணவுகளாகும். நிரம்பிய  கொழுப்புகளை கொண்ட  செந்நிற இறைச்சிவகைகள், பால், பாலுட்பத்திப் பொருட்கள்,  முட்டை மஞ்சட்கரு, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், உருளைக்கிழங்கு  chips, pizza, நெய், வெண்ணெயில் ஊறவைத்தபின் பொறிக்கப்பட்ட POP CORN, பொறித்த  உணவுகள், மூளை, குடல், chocolate  என்பன உடலின் கொலஸ்ரோல்  அளவை அதிகரிப்பதற்கு எதுவாக உள்ளதால்  அவற்றை மிக மிகக் குறைந்த அளவிலேயே உள்ளெடுக்க வேண்டும்.
அதிகளவு சக்தியை மட்டும் தரக்கூடிய மாப்பொருளானது மேலதிகமாகும் போது கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றது. இதனால் உடல் பருமன் அதிகரித்து  obesity  எனும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு உடல் பருமனானவர்கள் தொடரான உடல்பயிற்ச்சி செய்யத் தவறும்போது  அந்தப்பருமன் தொற்றா நோய்களை கைதட்டி அழைத்து தம் உடலினுள் குடியமர்த்துகின்றது.
இனியென்ன நாளைக்கோர் பிரச்சினை வைத்தியசாலைகளுக்கு ஏறி இறங்குவதும், பல்வேறு பரிசோதனைகளுக்கு என்று செலவழிப்பதும், நேரத்தை வீணடித்து, அலைச்சல்களுக்குள்ளாகி,அதன் பலனாக மன உளைச்சலுக்கு உள்ளாகி, இறுதியில் உடல் நலமும் உலனலமும் கெட்டுப்போய் குட்டிச்சுவராகவே  போய் விடுவோம்.
எனவே  உணவை பொறுத்தவரையில்  நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ?
  • அளவுடன் உள்ளெடுக்கபட வேண்டியவை : வெள்ளைச் சோறு, கிழங்கு வகை, இனிப்புக்கள், சீனி .
  • குறைக்க   வேண்டியவை : நிரம்பிய கொளுப்புக்கள்  உள்ள வெண்ணெய், பாலாடை, ஆடை நீக்காத பால் , உப்பு 
  • அதிகம் எடுக்க வேண்டியது : பழங்கள், காய் கறிகள்,
  • ஓரளவு அதிகம் உள்ளெடுக்க வேண்டியவை : மீன்,அவரை வகைகள், கோதுமை, 
போதியளவு நீரருந்துவதும் சுக வாழ்வுக்கு இன்றியமையாத ஒரு விடையமாகும்.
அதுபோல புகத்தலையும், மதுபானத்தையும் ஒருவர்  பயன்படுத்தாது  இருக்கும்போது தொற்றா நோய்கள் அவரை இலகுவில் அணுக முடியாது.தினமும் அரை மணிநேர உடற்பயிற்சி உடலில் மேலதிகமான சக்தியை எரித்து உடல் தசைகளை வலிமையாக்கி, உடலுக்கு நல்ல வலிமையையயும் சிறந்த தோற்றத்தையும் வழங்குகின்றது.நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்!

kattankudi. thanks

1 கருத்து:

  1. மருத்துவ தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சில தினங்களுக்கு முன் http://www.valaitamil.com/medicine இணையதளத்தை பார்த்தேன். அதிலும் உடல் நலக்குறிப்புகள் அழகாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நேரம் இருந்தால் நீங்களும் சென்று பாருங்களேன்.

    பதிலளிநீக்கு